மூலிகையன் பெயர் :- கல்லுருவி.
தாவரப்பெயர் :- AMMANNIA BACCIFERA.
தாவரக்குடும்பம் :- LYTHRACEAE.
பயன் தரும் பாகங்கள்சமூலம்.


வளரியல்பு :கல்லுருவி நல்லசீதோசன    நிலையில் எல்லாஇடங்களிலும் வளர்வதுஇதுசாதாரணமாக  இந்தியா முழுதும்சதுப்பு நிலங்களிலும் வளரும்பூண்டுவயல்களில் நெல்அறுவடைக்குப்பின் களையாகத்தென்படும் செடிஇதன் தாய்யகம்இந்தியாபின் ஆப்பிரிக்கா,ஆப்கானிஸ்தான்பாக்கீஸ்தான்,சைனாபிலிப்பனஸ் ,நியுஜினியாஆஸ்திரேலியா,மற்றும் மலேசியாவில் பரவிற்று.இதை ஆங்கிலத்தில் MONARCH RED STEM  என்பர் கல்லுருவி  ஒருஅடியிலிருந்து 2  அடி வரைவளரக்கூடியதுநேராக வளரும்.சிறு கிழைகள் அதிகாக இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில்அமைந்திருக்கும்இலைகள்மென்மையானவை நீளம் சுமார் 3.5செ.மீஇருக்கும்தண்டு சதுரவடிவில் அமைந்திருக்கும்இலை இடுக்குகளில் பூக்கள்பூத்திருக்கும்அதன் இதழ்கள்சுமார் 1.2 மி.மீநீழம் பச்சைஅல்லது கத்தரிப்பூ நிறத்தில்இருக்கும்சூலகம் வட்ட வடிவில்இருக்கம்இது  தன் மகரந்தச்சேர்க்கையால் காய் உண்டாகும்.விதைகள் கருப்பாக  இருக்கும். கல்லுருவி இனம் போன்றுதொடர்புடைய வேறு செடிகளின்பெயர்கள்- AMMANNIA BACCIFERA L.FORMA BACCIFERA, AMMANNIA BACCIFERA KOEHNE FORMA TYPICA, AND AMMANNIA BACCIFERA L.SUBSP.BACCIFERA.. இது போன்றுஎண்ணற்ற இனங்கள் உள்ளன.கல்லுருவி விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :- கல்லுருவிஇலைகள் புண்களைப் போக்கவல்லதுவிழத்தைக்குணப்படுத்தும்காச்சலைப்போக்கும்புற்றுநோயால் அழியும்செல்களைப் புதிப்பிற்கும்தன்மையுடையதுமேலும் இதுபற்றி பல ஆராய்ச்சிகள் மேல்நாட்டில் செய்துகொண்டுள்ளார்கள்இதன்மூலிகை இனம்  காண்பதில் சிலசிக்கல்கள் உள்ளதாகச் சொல்வர்.

கல்லுருவிப் பூண்டுபலகட்டிகளையுங் கரைக்கும்
வல்லுதிரக் கட்டருக்கும்வந்தபுண்ணை வெல்லரிய
மேகத் தைவல் விடத்தை நீறாதகற்றிடும்
லோகத்தைச் சுத்தி செய்யும்போது

கல்லுருவி மூலிகை இலையைஅரைத்து தோலில் தடவகொப்பளிக்கும் கட்டி உடையும்கடிநஞ்சுகளுக்கு இதன் இலையைக்கசக்கி கடிவாயில் வைத்துக்  கட்ட நஞ்சு  முறியும்தேள் கடிவிடத்தையும் முறிக்கும்இரத்தத்துடிப்பகற்றும்.
இலைச்சாற்றை வண்டு கடிக்குப்பூசினால் குணமடையும்இதன்இலைகளில் சி வைட்டமீன்உள்ளது.இதன் இலைச்சாற்றை உடல் மீதுதடவினால் தோல் வியாதிகுணமடையும்காச்சலும்குணமடையும்.ரணமான புண்களைக்குணப்படுத்த இதன் சமூலத்தைஅரைத்து  வைத்துக் கட்டகுணமடையும்.
உண்ணும் உணவுடன்இலைச்சாறு கலந்து விட்டால்அடிவயிற்றில் எரிச்சல் ஏற்படும்கவனத்துடன் கையாள வேண்டும்.

No comments:

Post a Comment